டெல்லியில் பிரதமர் மோடியை இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூா்யா இன்று (அக்.17) சந்தித்தார். அப்போது கல்வி, தொழில்நுட்பம், புத்தாக்க மேம்பாடு, மீனவர்கள் நலன் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். இந்தியா-இலங்கை இடையேயான சிறப்பு உறவுகளை எடுத்துரைத்த பிரதமர், இருநாடுகளின் பகிரப்பட்ட வளர்ச்சிப் பயணத்தில் ஒருங்கிணைந்து பணியாற்றும் இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிசெய்தார்.