தமிழகத்தைச் சேர்ந்த 30 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்த நிலையில், தற்போது விடுதலை செய்துள்ளது. எல்லைத் தாண்டி மீன் பிடித்த வழக்கில் அக். 9 ஆம் தேதி இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இன்று (நவ.6) நிபந்தனையுடன் அவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அபராத தொகையாக தலா ரூ.2.50 லட்சம் செலுத்தினால் உடனே விடுதலை, இல்லையென்றால் 6 மாதம் சிறை தண்டனை என்ற நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.