கேரளாவில் தென்மேற்குப் பருவமழை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு, தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவுகள் மற்றும் கேரளாவின் சில பகுதிகளில் பருவமழை பரவியுள்ளது. இதன் காரணமாகத் தமிழ்நாட்டில் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் படிப்படியாகக் குறைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி: பாலிமர்