இமாச்சல் பிரதேஷ்: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 3 நாட்களாக சரப்ராவில் உள்ள பிரியங்கா காந்தியின் வீட்டில் அவர் தனது விடுமுறையைக் கழித்து வந்தார். இந்நிலையில், சோனியா காந்தியின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, அவர் இந்திரா காந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். மருத்துவர்கள் குழு அவருக்கு எம்ஆர்ஐ உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது.