மக்களவை தேர்தலில் தேமுதிக சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன் விருப்ப மனு பெற்றுள்ளார். அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைந்து இந்த தேர்தலில் போட்டியிடுகிறது. இதனை இன்று காலை எடப்பாடி பழனிசாமி உறுதி செய்தார். தேமுதிகவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி, விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரனும், கள்ளக்குறிச்சி தொகுதியில் எல்.கே.சுதீஷூம் விருப்ப மனு பெற்றுள்ளார்கள்.