சீனாவில் 10 வயது சிறுவன் தனது பரிசுப் பணத்தை பயன்படுத்தியதாக தந்தை மீது வழக்கு தொடர்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற சீனர்களின் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, உறவினர்கள் சிறுவனுக்காக ரூ.11 லட்சம் பரிசுத் தொகையை அனுப்பியுள்ளனர். அந்த பணத்தை தனது இரண்டாவது திருமண செலவிற்காக தந்தை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுவன் வழக்கு தொடர்ந்த நிலையில், அந்த பணத்தை சிறுவனுக்கு திருப்பித் தர தந்தைக்கு உத்தரவிட்டுள்ளது.