கோவை வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் சத்தியமூர்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "வரும் 3ம் தேதி வரை மேற்கு மாவட்டங்களில், தூறல் அல்லது லேசான மழை எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்தது 8 முதல் அதிகபட்சம் மணிக்கு 26 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், மண் அரிப்பைத் தடுக்க தேவையான முன்னெடுப்புகளை மேற்கொள்ளவும். காற்று வேகமாக வீசும் சமயங்களில், களைக் கொல்லி, பூச்சிக் கொல்லிகளைத் தெளிப்பதைத் தவிர்க்கவும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.