சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஆகியோர் பங்கேற்ற இளைஞரணி ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸிற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நன்றியுணர்ச்சி இல்லாமல் ஒரே இரவில் காங்கிரஸ் அணி மாறியதாகக் கூட்டத்தில் நிர்வாகிகள் குற்றம் சாட்டினர். மேலும், அங்கிருந்த நிர்வாகிகள் "காங்கிரஸ் ஒழிக!" என முழக்கமிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நன்றி: நியூஸ் 18