அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா நடிப்பில் இன்று (பிப்.27) திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘தாய் கிழவி’. இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். இந்த படத்தைப் பார்த்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், ‘அஜித்குமாரை வைத்து படம் இயக்குவீர்களா?” என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், “நான் சின்னதாக ஒரு நிறுவனம் வைத்திருக்கிறேன். ஒருநாள் பெரிய நிறுவனமாக மாறினால் அஜித் சாரை வைத்து படம் தயாரிக்க முயற்சிக்கிறேன்” என்றார்.