சிங்கம்புணரியில் அய்யனார் கோயிலில் திருக்கல்யாணம்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட, சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் வைகாசி திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் மூஷிகம், பூதம், குதிரை, ரிஷபம், கேடயம், உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதிஉலா நிகழ்ச்சி நடைபெறும். 5ம் நாள் திருவிழாவான இரவு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. 

முன்னதாக பல்லக்கில் திருவீதி உலா வருகை தந்து திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமிக்கும் அம்மனுக்கும் மங்கலநாண் பூட்டப்பட்டு திருக்கல்யாண வைபவ விழா மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் சிங்கம்புணரி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவில் நான்கு ரத வீதிகளில் சுவாமி வீதிஉலா நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி