திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாச சேதுபதி, 20 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த சட்டமன்ற அலுவலகத்தை மக்கள் குறைதீர்க்கும் அலுவலகமாக திறந்து வைத்தார். மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதத் தலைவர்கள் முன்னிலையில் இந்த அலுவலகம் திறக்கப்பட்டது.