அதனைத் தொடர்ந்து பிரியதர்ஷினி ஐயப்பன் உச்ச நீதிமன்றத்தை நாடினார். உச்சநீதிமன்றம் இது தொடர்பான வழக்கை சிவகங்கை நீதிமன்றத்தில் நாடி பரிகாரம் பெறலாம் என்று உத்தரவிட்டது. அவருக்கு கடந்த மாதம் இரண்டாவதாக அறிவிக்கப்பட்ட பிரியதர்ஷினி ஐயப்பன் வெற்றி பெறுவார் என்று சிவகங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனைத் தொடர்ந்து தேவி மாங்குடி மதுரை உயர்நீதிமன்றத்தை நாடினார். சிவகங்கை நீதிமன்றம் பிரியதர்ஷினி ஐயப்பன் வெற்றி பெறுவார் என்று அறிவித்ததை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. அதனைத் தொடர்ந்து பிரியதர்ஷினி ஐயப்பன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவராக பதவி ஏற்றார். அதனைத் தொடர்ந்து தேவி மாங்குடி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் தேவி மாங்குடி வெற்றி பெறுவார் என சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது.
ஈரோட்டில் தவெக விஜய் பரப்புரைக்கு அனுமதி!