அப்போது மாணவர்களிடம் உங்களுக்கு பிடித்த ஹீரோ யார் என கேட்க விஜய் என்றும், ஹீரோயின் நயன்தாரா என்றும் கூறினர். பிள்ளையை நன்றாக வளர்த்துள்ளீர்கள் என கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பெற்றோர்களை பாராட்டினார். பின்பு குட்டி கதை சொல்லி, மாணவர்களுக்கு பள்ளியில் கட்டணம் விஜய்யோ, அஜித்தோ கட்டுவதில்லை பெற்றோர்கள்தான் கட்டுகிறார்கள். ஆகவே மாணவர்களுக்கு தந்தை தான் ஹீரோ, தாய் தான் ஹீரோயின் என்று உணர வைத்தார்.
ஒரு குழந்தை நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே என்ற பாடலையும் பாடிக் காண்பித்தார். அம்மா சொன்னால் மகன்கள் கேட்பார்கள். ஆனால் அம்மாக்கள் சீரியலை ரசித்து கொண்டிருந்தால், குடும்பம் சீரழியும், பிள்ளைகள் செல்போனுக்கு அடிமையாகி விடுவர். உங்கள் பிள்ளைகளுக்கு மதிப்பை சொல்லிக் கொடுங்கள், என்றார்.