இங்கிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் உரத்துப்பட்டி கிராமமும், 2 கிலோமீட்டர் தொலைவில் மேலவண்ணாரிருப்பு கிராமமும் உள்ளது. இங்குள்ள மாணவர்கள் மேலவண்ணாரிருப்பில் உள்ள எஸ். புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கேசம் பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்க சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் செல்கின்றனர். மேலவண்ணாரிருப்பில் இருந்து கீழவண்ணாரிருப்பு உரத்துப்பட்டி வரை சுமார் 6 கிலோமீட்டர் தூரம் உள்ள சாலை பட்டா இடங்களில் ஏனாதானோ என தார் சாலை அமைத்தும் வனப்பகுதியில் உள்ள சாலை வனத்துறை அனுமதி வழங்காததால் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் சாலை அமைக்க முடியாமல் கரடு முரடாக உள்ளது. சாலை அமைக்க கிராம மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்
தேசிய டிஜிட்டல் கால்நடை திட்டம் பற்றி தெரியுமா?