அப்போது எஸ். வி. மங்கலம் கிழக்குப் பட்டியில் தூக்க கலக்கத்தில் தாறுமாறாக ஓடிய ஆம்னி வேன் புளிய மரத்தில் பயங்கரமாக மோதியது. டமார் என பயங்கர சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் குடியிருக்கும் குடியிருப்பாளர்கள் வந்து பார்த்தபோது அப்பளம் போல் நொறுங்கிய ஆம்னி வேனில் படுகாயத்துடன் சிக்கி இருந்த மாயழகனை மீட்டு சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாயழகன் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து எஸ். வி. மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை - சீமான் கண்டனம்