சிவகங்கை: குப்பைகள் அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள்

சிவகங்கை அரண்மனை அருகே மன்னர் காலத்தில் செம்பூரான் கற்களைக் கொண்டு 5 ஏக்கரில் பிரம்மாண்டமான தெப்பக்குளம் கட்டினர். இந்த தெப்பக்குளத்தை பராமரிக்காமலும், பாதுகாக்காமலும் விட்டுவிட்டனர். இதனால் தெப்பக்குளத்திற்கு செட்டியூரணியில் இருந்து வரும் வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பால் சுருங்கிவிட்டது. அக்கால்வாயில் மழைநீர் செல்லாமல் வீடுகள், ஓட்டல், வர்த்தக நிறுவனங்களில் சேகரமாகும் கழிவுநீரை விட்டனர். அக்கழிவுநீர் தெப்பக்குளத்தில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. 

மேலும் பிளாஸ்டிக், குப்பைகளால் மிதக்கின்றன. சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், தெப்பக்குளத்தில் உள்ள நீராதாரத்தை பாதுகாக்கும் நோக்கில், தனிக்கவனம் செலுத்தி தெப்பக்குளத்திற்குத் தடுப்புச்சுவர்களை கட்டி, கழிவுநீர் கலக்காதவகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களிடமிருந்து கோரிக்கை எழுந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது சிவகங்கை நகராட்சி ஆணையர், நகர்மன்றத் தலைவர் துரை ஆனந்தத் தலைமையில் காலையில் நகராட்சிப் பணியாளர்கள் பிளாஸ்டிக் போட்டு மூலம் 2 டன் அளவில் குப்பைகளை அகற்றி முதல்கட்டமாகச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி