அதனைத் தொடர்ந்து, நகராட்சியின் 27-ஆவது வார்டு பகுதியில் மாஸ் கிளீனிங் பணியை நகர் மன்றத் தலைவர் துரை ஆனந்த் தொடக்கி வைத்தார். திரளான துப்புரவுப் பணியாளர்கள் மூலம் வீதிகளின் கால்வாயில் தேங்கியுள்ள கழிவு நீர் அடைப்புகள், முட்செடிகள், குப்பைகள் அப்புறப்படுத்தப்பட்டன. முன்னதாக, நகராட்சி ஆணையர் கிருஷ்ணராம், நகராட்சி சுகாதார அலுவலர் அப்துல்ஜபார் ஆகியோர் முன்னிலையில் சுகாதார உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில், 26-ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் மதியழகன், மேற்பார்வையாளர்கள் செந்தில்வேல், கணேசன், மாலதி மற்றும் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
நிலநடுக்கத்தில் காப்பாற்றிய ராணுவ வீரரை மணந்த சிறுமி!