இந்த வீடுகள் அனைத்தும் பராமரிப்பின்றி, கூரை, ஜன்னல், சுற்றுச்சுவர்கள் சேதமுற்றுள்ளன. இந்த வீடுகளில் குடியேற ஊழியர்கள் அச்சம் அடைகின்றனர். ஆண்டாண்டு காலமாக சேதமான வீடுகள் பூட்டியே கிடப்பதால், விஷ ஜந்துக்களின் கூடாரமாகி விட்டது. அரசு விதிப்படி, வீட்டு வசதி வாரியம் கட்டிய வீடுகள் 30 ஆண்டுகளை கடந்துவிட்டது. இதில் ஒரு சில ஊழியர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டு வாடகைக்கு இருந்து வருகின்றனர். சேதம் அடைந்துள்ள அரசு குடியிருப்பு வீடுகளை பராமரிக்க வேண்டும். பாழடைந்து ஊழியர்கள் குடியிருக்காமல் உள்ள வீடுகளை அப்புறப்படுத்த வேண்டும். அதேபோல் ஏற்கனவே அப்புறப்படுத்திய டி. இ பிளாக் குடியிருப்புகளை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மனிதர்களை அதிகம் கொல்லும் உயிரினம் எது?