காரைக்குடி வழக்கறிஞர் மணிமேகலை, மாவட்ட பாதுகாப்பு அலுவலர் (ம) சமூக நலத்துறை ஈஸ்வரி ஆகியோர் கருத்துரை வழங்கினர். வழக்கறிஞர்கள் கௌசல்யா, பிரவீனா, ஞானசுபதர்ஷினி, ஜெயமலி ஆகியோர் பெண்களைப் போற்றும் தேசமே விழிப்புணர்வு பாடலை பாடினர். விடியல் என்ஜிஓ மகளிர் மேம்பாட்டுக் குழு சார்பாக கைபேசினால் சமூகத்தில் நடக்கும் அவலங்கள் குறித்து நாடகமாக விளக்க உரையாற்றினர். வழக்கறிஞர் தர்ஷினி சாதனைப் பெண்கள் என்னும் கவிதை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் ஒன்றிய அலுவலக ஊழியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சட்டம் சார்ந்த தன்னார்வலர் நாகேந்திரன் நன்றி கூறினார்.
மம்முட்டியின் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் OTT அப்டேட்