சிவகங்கை: வாள் வைத்து காவலர்களை மிரட்டியவர் மீது வழக்குப்பதிவு

சிவகங்கை தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கணேசன் தொண்டி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அரவிந்த் (31) என்பவர் கையில் வாளுடன் பொதுமக்களை அச்சுறுத்தியுள்ளார். காவலர்கள் அவரை பிடிக்க முயன்றபோது, அரசு பணியை செய்ய விடாமல் தடுத்து, "இங்கு வந்தால் வெட்டி விடுவேன்" என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்தி