திருப்பத்தூர் அருகே சுள்ளாம்பட்டியைச் சேர்ந்த 23 வயதான இளைஞர் இவருக்கு 16 வயது சிறுமியை திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணத்திற்குப் பிறகு சிறுமி இரண்டு மாத கர்ப்பமாக உள்ள நிலையில், குழந்தைகள் நலப் பாதுகாப்பு அலுவலர் சுதா கொடுத்த புகாரின் பேரில், அனைத்து மகளிர் காவல் துறையினர் சிறுமியை திருமணம் செய்த கணவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.