சிவகங்கை அருகே தமராக்கி கிராமத்தில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் 16 காளைகள் மற்றும் 112 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். ஒரு காளையை அடக்க 25 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது. காளைகள் மற்றும் வீரர்கள் மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். போட்டியில் 7 வீரர்கள் காயமடைந்தனர். சிறந்த வீரர்களுக்கும் காளைகளுக்கும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.