இது தொடர்பாக, சிவகங்கை நகரின் பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சியருக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டர்களில், "மண் மக்களுக்கு மட்டுமே, கொள்ளையர்களுக்கு அல்ல", "விருதுநகர் மாவட்ட ஆட்சியர் போல், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?" போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மண் கொள்ளைக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கிராம மக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கிராம மக்கள் தரப்பில் கூறப்படுகிறது. கிராம மக்கள் தொடர் புகார்களை அளித்தும், போஸ்டர்கள் ஒட்டப்பட்டும், மாவட்ட ஆட்சியர் மௌனம் காப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. நகர் முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் காரணமாக பரபரப்பு நிலவுகிறது.