பின்னர் இயக்குநரும் நடிகருமான பாண்டியராஜன் அவரைப் கவனித்து, 'ஆண்பாவம்' திரைப்படத்தில் நடிக்க வைத்ததுடன், சில பாடல்களையும் பாடச் செய்தார். அதன் பின்னர், 'ஆயுசு நூறு' மற்றும் 'கோபாலா கோபாலா' ஆகிய திரைப்படங்களிலும் நடித்தார். நாட்டுப்புற பாடல்களில் முன்னோடியாகக் கருதப்படும் இவருக்கு, 1993-ஆம் ஆண்டு தமிழக அரசின் 'கலைமாமணி' விருது வழங்கப்பட்டது. இவரது வாழ்க்கையில் ஏற்பட்ட சோக நிகழ்வுகள், திரைத்துறையிலிருந்து விலகச் செய்தன. பாடல் ஒலிப்பதிவிற்குச் சென்றிருந்தபோது கணவர் மரணமடைந்ததால் திரைக்கலையிலிருந்து ஒதுங்கினார். அதையடுத்து தனது மகளையும் இழந்ததால், கொல்லங்குடி வீட்டில் தனிமையில் வாழ்ந்தார். வயது முதிர்வு காரணமாக காலமானார்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்