சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பத்திர பதிவு அலுவலகத்தில் முறைகேடுகள் நடப்பதாகக் கூறப்படும் நிலையில், சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில், அலுவலகத்திற்குள் ஒருவர் கவரில் பணம் எடுத்துச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. பணம் எந்த நோக்கத்திற்காக கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்துத் தெரியவில்லை. பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.