ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோயில் அருகே கொட்டகுடி பகுதியைச் சேர்ந்த அழகர் பாண்டி, மருது பாண்டியரின் குருபூஜை விழாவில் பங்கேற்க காளையார்கோவில் வந்தபோது, தேரடி திடல் பகுதியில் நிறுத்தி வைத்திருந்த தனது இருசக்கர வாகனம் திருடு போனது. இதுகுறித்து அவர் காளையார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல் உதவி ஆய்வாளர் ஜெயகண்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.