முன்னதாக மூலவர் சுந்தரேஸ்வரர் சுவாமிக்கு மஞ்சள், பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்து வில்வத்தால் அர்ச்சனை செய்யப்பட்டது.
பின்னர் உற்சவ தெய்வங்களை பக்தர்கள் தோளில் சுமந்து கோவில் பிரகாரம் மூன்று முறை வலம் வந்தனர். நிறைவாக சுவாமிக்கு மகா பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி, அம்மன், நந்தி பகவானை வழிபட்டனர்.