முன்பு சுந்தரநகரில் உள்ள நகராட்சி கிடங்கில் குப்பைகள் தேங்கியிருந்தன. ஆனால் மக்கள் எதிர்ப்பினால் அங்கு குப்பை கொட்டுவது நிறுத்தப்பட்டது. அதன் பின்னர், மானாமதுரை சாலை, காளவாசல், மருதுபாண்டியர் நகர் போன்ற இடங்களில் தரம் பிரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டன. மக்கும் குப்பைகளில் நுண் உரம் தயாரிக்கவும், பிளாஸ்டிக் குப்பைகளை சிமென்ட் ஆலைக்கு அனுப்பவும் திட்டமிடப்பட்டது. ஆனாலும், சேகரிக்கப்படும் மொத்த குப்பையுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவான அளவே தரம்பிரிக்கப்பட்டு அகற்றப்படுகின்றன.
இதனால் தரம் பிரிக்கும் மையங்களிலும் குப்பைகள் தேங்குவதுடன், நகரின் பல பகுதிகளில் தீ வைத்து குப்பைகள் எரிக்கப்படும் நிலை தொடர்கிறது. இது தொடர்பாக பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தும், நகராட்சி நிர்வாகம் இதுவரை முழுமையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.