தொண்டி சாலைப் பாலம் அருகே சென்றபோது ஆடு குறுக்கே வந்ததால் முன்னால் சென்றுகொண்டிருந்த காரை ஓட்டுநர் திடீரென நிறுத்தினார். அப்போது, அதன் மீது பின்னால் வந்த ஷோ் ஆட்டோ மோதியது. இதில் மாணவிகள் 5 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சுகப்பிரியாவுக்கு கால் முறிவு ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து சிவகங்கை நகர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரபல ஹாலிவுட் வில்லன் நடிகர் அலெக்சாண்டர் மார்ட்டன் காலமானார்