சிவகங்கை: அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

சட்டமேதை அம்பேத்கரின் 135-வது பிறந்த நாளையொட்டி சிவகங்கை பழைய அரசு மருத்துவமனை அருகே உள்ள அவரது சிலைக்கு அனைத்து கட்சி நிர்வாகிகள், தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தி. மு. க. சார்பில் நகர் மன்ற தலைவர் துரைஆனந்தன், கவுன்சிலர்கள் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். 

அ. தி. மு. க. சார்பில் நகர செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் கவுன்சிலர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் உட்பட பலர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர். இதேபோன்று விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி