தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் -ஆட்சியர் தகவல்

இந்திய அரசு, திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவு அமைச்சகம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இணைந்து நடத்தும் பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் வருகின்ற திங்கட்கிழமை, 9.2.2026 அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிவகங்கை, முத்துப்பட்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் மாநில, மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட தொழிற் நிறுவனங்கள் நேரடியாக பங்கேற்று பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை நடத்தவுள்ளன. கூடுதல் விபரங்களுக்கு 04575 - 290625 அல்லது 9342192184, 9894211427, 9942099481 ஆகிய எண்களிலோ அல்லது மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகம் (முதல் தளம்), சிவகங்கை என்ற முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கா. பொற்கொடி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி