அந்த மாணவி கூச்சலிடவே சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு ஏராளமான மாணவர்கள் ஓடிவரவே அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதனை அடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில் மாவட்ட எஸ்.பி ஆஷித் ராவத் தலைமையிலான குழுவினர் சம்பவ இடம் வந்து பாதிக்கப்பட்ட பெண் மருத்துவரிடம் விசாரணை மேற்கொண்டதுடன் குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவி மீது தாக்குதல் மட்டுமே நடைபெற்றதாகவும் அது குறித்து சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் மருத்துவக்கல்லூரி நிர்வாகம் சார்பில் புகார் அளித்துள்ளதாகவும் காவல்துறையினர் தக்க நடவடிக்கை எடுத்துவருவதாகவும் மருத்துவக்கல்லூரி முதல்வர் சத்தியபாமா தகவல் தெரிவித்துள்ளார்.