தொழுவில் இருந்து முதலில் கோயில் காளை அவிழ்த்துவிடப்பட்டதைத் தொடர்ந்து மற்ற காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. தொழுவில் இருந்து 50-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. முன்னதாக ஆங்காங்கே கட்டுமாடுகளாக 250-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
இதில், சிவகங்கை, திருப்பத்தூர், மேலூர், சிங்கம்புணரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த காளைகள் பங்கேற்றன. மாடுகள் முட்டியதில் 10-க்கும் மேற்பட்டோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியை சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கண்டுகளித்தனர்.