சிவகங்கை: தலையை வெட்டியசம்பவத்தில் முக்கிய குற்றவாளி கைது

சிவகங்கை மாவட்டம் நாட்டார்குடி கிராமத்தைச் சேர்ந்த சோணைமுத்து (65), கடந்த ஏழு ஆண்டுகளாக தனியாக வாழ்ந்து விவசாயம் செய்து வந்தவர். இவரது குடும்பம் மதுரையில் வசித்து வருகின்றது. 20.07.2025 (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகலில், சோணைமுத்து தனது வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், அவரை வாளால் கொடூரமாக வெட்டி, தலையை துண்டித்து எடுத்துச் சென்று தப்பிச் சென்றனர். 

மேலும், அருகில் இருந்த பாண்டி (66) என்பவரும் தாக்கப்பட்டார். சம்பவம் தொடர்பாக திருப்பாசேத்தி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். பின்னர், டி.புதூர் கண்மாயிலிருந்து சோணைமுத்துவின் தலையை மீட்ட போலீசார், அதை அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர். 

விசாரணையில், பி.வேலாங்குளம் பகுதியைச் சேர்ந்த சிங்கமுத்து (25) மற்றும் நாட்டார்குடியைச் சேர்ந்த சமயதுரை (25) மீது சந்தேகம் எழுந்தது. சோணைமுத்துவின் உறவினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிங்கமுத்து கைது செய்யப்பட்டார். 

இக்குற்றவழக்கில் சமயதுரை ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக தலைமறைவாக இருந்த சிங்கமுத்துவையும் தற்போது திருப்பாசேத்தி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி