சௌமிய நாராயண திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த பாஜக முன்னாள் தமிழக தலைவர் அண்ணாமலை, ஓ.பன்னீர்செல்வம் தனித்து விடப்படவில்லை என்றும், அவர் எங்களுடன் தான் உள்ளார் என்றும் தெரிவித்தார். தமிழகத்தின் கல்வித்தரம் குறித்து பேசிய அவர், கற்பதில் தென் இந்தியாவில் தமிழகம் கடைசி இடத்தில் உள்ளதாகவும், கல்விக்கூடங்களில் கஞ்சா விற்பனை நடப்பதாகவும் திமுக அரசை குற்றம் சாட்டினார். கனிமொழியின் இந்தி குறித்த கருத்துக்களுக்கு பதிலளித்த அவர், அவர் மனநோய் மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும் என்றார்.