சிவகங்கை: உயர்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறையினை ஆய்வு

+2 மாணவர்களின் உயர்கல்வி வழிகாட்டலுக்காக சிவகங்கை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. 

நான் முதல்வன் திட்டத்தின் கீழ், +2 முடித்த மாணவர்கள், அனைவரும் உயர்கல்வியில் சேர்வதனை உறுதி செய்திடும் பொருட்டும், மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான வழிகாட்டுதலுக்காகவும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக தரைத்தளத்தில், பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை அருகில் மாணவர்களின் உயர்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றையதினம் (06.06.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் பார்வையிட்டு உயர்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறையினை, ஆய்வு மேற்கொண்டார். இதில் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) மாரிமுத்து அவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி