பின்னர் அவர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் வேலை காலியாக இருப்பதாகவும், வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் அந்த வேலை நிரப்பப்பட உள்ளதாகவும் பாஸ்கரின் மனைவிக்கு அந்த வேலை வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளார். இதை நம்பிய பாஸ்கர் கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரூ.2 லட்சத்து 30 ஆயிரத்தை கொடுத்துள்ளார்.
பணத்தைப் பெற்றுக் கொண்ட சரவணகுமார் ஏற்கனவே கூறியபடி பாஸ்கரின் மனைவிக்கு வேலை வாங்கி தராமலும் வாங்கிய பணத்தை திருப்பி தராமலும் ஏமாற்றினாராம். இது தொடர்பாக சிவகங்கை நகர் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் சரவணகுமார் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.