சிவகங்கை அருகே கீழக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள ஆதீனமிளகி அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு கீழக்கோட்டை கண்மாய் பகுதியில் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக கீழக்கோட்டை குரூப் கிராம நிர்வாக அலுவலர் செங்கதிர் செல்வன் மதகுபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து கீழக்கோட்டை பகுதியைச் சேர்ந்த தமிழரசன் மற்றும் இவருடன் சேர்ந்து நான்கு நபர்களிடம் இன்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.