சிவகங்கை மாவட்டத்தில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்படும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் இன்று ஏழாவது நாளாக தொடர்கிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெறும் இந்த போராட்டத்தில் 285 வருவாய்த்துறை அலுவலர்கள், 361 கிராம உதவியாளர்கள், 177 கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் 75 நிலஅளவர்கள் என மொத்தம் 898 பேர் பங்கேற்றுள்ளனர்.