விநாயகர் சிலை ஊர்வலத்தை, பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பினர், பக்தர்கள் முன்னெடுத்து நடத்தி வருகின்றனர். அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் நிகழாண்டில் நடைபெறும் விநாயகர் ஊர்வலத்துக்காக 346 இடங்களில் விநாயகர் உருவச்சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
அதில் சிவகங்கை நகரில் சிவன்கோயில் திடல், காளவாசல், திருப்பத்தூர் சாலை ஆவரங்காடு தேவர் சமாதி, ஜெ. பி. திரையரங்கம், அரசு போக்குவரத்துக்கழக பணிமனை, உழவர் சந்தை, வாரச்சந்தை சாலை, ரயில்நிலையம், கொடிக்காடு, ரயில்வேகேட் இந்திராநகர் உள்பட 11 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன. அவை இன்று(செப்.12) தெப்பக்குளத்தில் கரைக்கப்பட்டனர்.