சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே, கண்மாயில் உறவினர்களுடன் மீன் பிடிக்கச் சென்ற 8 வயது சிறுமிக்கு, அதே பகுதியைச் சேர்ந்த காளிமுத்து (25) என்பவர் பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.