அங்கன்வாடி கட்டிடம் அமைந்துள்ள இடம் முட்புதராகவும், மயானக்கரை செல்லும் பாதையாகவும், சிதைவடைந்து காணப்படுவதாலும், விஷ ஜந்துக்கள் உலாவுவதாலும் பெற்றோர்கள் குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்ப பயந்து கொள்கின்றனர். மேலும் குடிநீர் வசதி இல்லை, மின்சார வசதி இல்லை, கழிப்பறை வசதி இல்லை.
குடிப்பதற்கும் சமைப்பதற்கும் ஒரு கிலோமீட்டர் தூரத்திலிருந்து தலைச்சுமையாக தண்ணீர் கொண்டு வர வேண்டியுள்ளது. அடிப்படை தேவைகள் இன்றி அங்கன்வாடி மையம் இயங்குவதால் குழந்தைகள் அவதிக்குள்ளாகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்திலேயே குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்பி வைக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் அங்கன்வாடி மையத்தை சீரமைத்து அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என கிராம மக்கள் இன்று கோரிக்கை விடுத்துள்ளனர்.