சிவகங்கை: முட்புதருக்குள் இயங்கும் அங்கன்வாடி மையம்

சிவகங்கை அருகே உள்ளது படமாத்தூர் பி. வேலங்குளம் கிராமம். இங்கு சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள அங்கன்வாடி மையத்திற்கு 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வந்தனர். தற்போது வெறும் 10 குழந்தைகள் மட்டுமே வருகின்றனர். 

அங்கன்வாடி கட்டிடம் அமைந்துள்ள இடம் முட்புதராகவும், மயானக்கரை செல்லும் பாதையாகவும், சிதைவடைந்து காணப்படுவதாலும், விஷ ஜந்துக்கள் உலாவுவதாலும் பெற்றோர்கள் குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்ப பயந்து கொள்கின்றனர். மேலும் குடிநீர் வசதி இல்லை, மின்சார வசதி இல்லை, கழிப்பறை வசதி இல்லை. 

குடிப்பதற்கும் சமைப்பதற்கும் ஒரு கிலோமீட்டர் தூரத்திலிருந்து தலைச்சுமையாக தண்ணீர் கொண்டு வர வேண்டியுள்ளது. அடிப்படை தேவைகள் இன்றி அங்கன்வாடி மையம் இயங்குவதால் குழந்தைகள் அவதிக்குள்ளாகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்திலேயே குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்பி வைக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் அங்கன்வாடி மையத்தை சீரமைத்து அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என கிராம மக்கள் இன்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி