கடையில் செக்யூரிட்டி விடுறையில் சென்றது, சிசிடிவி கேமராக்கள் இயங்காமல் இருந்தது உள்ளிட்டவைகளை அறிந்த மர்ம நபர்கள் திட்டமிட்டு இக்கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்து
கொள்ளையர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப் படையினர் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் முகாமிட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.
மேலும் இதே முறையில் நடைபெற்ற கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகளின் தகவல்களை பெற்று, அவர்களின் செயல்பாடுகளையும் கண்காணித்து வந்தனர். இந்நிலையில், மதகுபட்டி கொள்ளையில் ஈடுபட்டதாக கள்ளக்குறிச்சி மாவட்டம், குளத்துறை சேர்ந்த பாண்டியன்(33), திம்மமலையைச் சேர்ந்த பழனி(45), திருமலை நகரைச் சேர்ந்த வேலாயுதம்(46) ஆகிய மூவரை தனிப்படை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். மேலும் இக்கொள்ளையில் தொடர்புடைய மேலும் சிலரை போலீஸார் தேடி வருகின்றனர்.