பல ஆண்டுகளாக விரிசல் அடைந்து காணப்படும் இந்த வீட்டினை கட்டித் தர வேண்டும் என அரசு அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது இவர்கள் வசித்து வரும் இடம் கோயிலுக்கு சொந்தமானது என்பதால், தங்களுக்கு சொந்த இடமோ வீடோ இல்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர். வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததால், விஷ ஜந்துக்கள் இரவு நேரங்களில் தொந்தரவு செய்வதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர். அரசு தங்களுக்கு சொந்த இடம் மற்றும் வீடு கட்டித் தர வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். இவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அரசு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்