சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு முகாமில், ஆகாஷ் டெலிசனின் பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு 79 நாட்கள் ஆகியும் விசாரணை நிறைவடையவில்லை என்றும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை, குற்றவாளிகளின் பெயர்கள் சேர்க்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.