இத்தடுப்பூசியினை கால்நடைகளுக்கு செலுத்துவதனால், இதன் வாயிலாக தங்களது கால்நடைகளை, கால் மற்றும் வாய்க்காணை (கோமாரி) நோயின் தாக்கலிருந்து பாதுகாத்திட முடியும். இதனால் கறவைமாடுகள் பால் உற்பத்தி, எருதுகளின் வேலைத்திறன், கறவைமாடுகளின் சினை பிடிப்பு போன்றவைகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு பாதுகாக்கப்படும்.
இதனை கால்நடை வளர்ப்போர் கருத்தில் கொண்டு, தங்களது பகுதிகளில் நடைபெறும் முகாமினை நல்லமுறையில் பயன்படுத்திக் கொண்டு, அனைத்து மாட்டினங்களுக்கும் இலவசமாக கோமாரி தடுப்பூசியினை செலுத்தி, உங்கள் கால்நடை செல்வங்களை கோமாரி நோயிலிருந்து பேணி பாதுகாத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தெரிவித்தார்.