சிவகங்கை: ஆக்கிரமிப்புகள் அகற்றம்; பொதுமக்கள் பாராட்டு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பேரூராட்சி நகர பகுதியில், மதுரை – ராமேஸ்வரம் நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில் பல்வேறு கடைகள் ஆக்கிரமித்திருந்தன. இதனால் பெரும்பாலான நேரங்களில் பேருந்துகள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வந்தது. 

சாலையின் அகலம் குறைந்து பொதுமக்களுக்கு ஏற்படும் இன்னல்களை தவிர்க்க நெடுஞ்சாலை துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகத்துக்கு பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தனர். இதையடுத்து, நெடுஞ்சாலை துறை, பேரூராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறை இணைந்து கோணம் அரசு மருத்துவமனை முதல் திருப்புவனம் யூனியன் ஆபீஸ் வரை சாலையோர ஆக்கிரமிப்புகளை ஜேசிபி உதவியுடன் அகற்றினர். இந்த நடவடிக்கையை பொதுமக்கள் வரவேற்று, அதிகாரிகளுக்கு நன்றியும் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி