சிவகங்கை மாவட்டம் மானாமதுரை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் 02.08.2025 சனிக்கிழமையன்று காலை 10 மணி முதல் மதியம் 2மணி வரை மானாமதுரை, சிப்காட், இராஜகம்பீரம், முத்தனேந்தல், இடைக்காட்டூர், மிளகனூர், கட்டிக்குளம், தெ.புதுக்கோட்டை, முனைவென்றி, குறிச்சி, கச்சாத்தநல்லூர், நல்லாண்டிபுரம், சங்கமங்கலம், அன்னவாசல், கீழப்பசலை ஆகிய பகுதிகளிலும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.