சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் புதூர் பகுதியில் பூமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 14 காளைகளும் 126 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். காளையை அடக்கிய வீரர்களுக்கும், அடங்க மறுத்த காளையின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இப்போட்டியை திருப்புவனம், பூவந்தி, மடப்புரம் மானாமதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.