இப்பகுதியைச் சேர்ந்த பாலு, பாண்டிச்சேரி உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் தங்களது நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகளை நத்தபொறுக்கி வலசை கண்மாய் பகுதியில் அமைச்சருக்கு விட்டிருந்தபோது ஐந்துக்கும் மேற்பட்ட ஆடுகள் மர்மமான முறையில் ஒன்றன்பின் ஒன்றாக சுருண்டு விழுந்து பலியானது.
இதனால் மிகவும் கவலையடைந்த விவசாயிகள் கால்நடைத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து அவர்கள் விரைந்து வந்து பலியான ஆடுகளை பரிசோதனை செய்து மற்ற ஆடுகளுக்கு மருந்து மாத்திரைகளை வழங்கினர். வருவாய் மற்றும் கால்நடைத் துறையினர் அப்பகுதியில் கிடக்கும் கண்மாய்களில் உள்ள தண்ணீரில் ஏதும் விஷம் கலக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.